பொங்கலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் - தே.மு.தி.க. 

by Admin / 07-12-2021 12:31:39pm
பொங்கலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் - தே.மு.தி.க. 

பொங்கலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் - தே.மு.தி.க. 


தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்கட்சி அலுவலகத்தில்  நடைபெற்றது. கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி மற்றும் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.
  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

*தமிழக அரசு ஆண்டு தோறும் தை பொங்கலுக்கு   குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்.
 பயிர்சேதத்தை கணக்கிட்டு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்.

* தமிழகத்தில் ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும்.

* ஒமைக்ரான் கொரோனா பரவும் நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

* நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும். 

* பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* முல்லை பெரியாறு அணையை கேரள அரசுக்கு விட்டுக்கொடுக்காமல் 152 அடியாக உயர்த்த வழி செய்ய வேண்டும்

 

Tags :

Share via