தமிழகமெங்கும் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும், பயிர் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
பொங்கல் பரிசு தொகையை அறிவிக்க வேண்டும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக அரசுக்கு எதிராகவும், தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றாததை கண்டித்தும் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்தது.
அதன்படி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் போடியிலும், முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடியிலும் , துணை ஒருங்கிணைப்பாளர் கே;முனுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் தங்கள் சொந்த மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் திரளான அதிமுகவினர் கலந்துகொண்டனர்.
Tags : AIADMK protests across Tamil Nadu