பொள்ளாச்சி பாலியல் வழக்கில்  விரைவில் நடவடிக்கை உதயநிதி ஸ்டாலின் 

by Editor / 04-05-2021 04:08:37pm
 பொள்ளாச்சி பாலியல் வழக்கில்  விரைவில் நடவடிக்கை உதயநிதி ஸ்டாலின் 

 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். இந்த நிலையில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின்  பொதுமக்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி , தனக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மக்களின் கோரிக்கை அனைத்தையும் 7ஆம் தேதிக்கு பிறகு நிறைவு செய்வேன். ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று உறுதி அளித்தார்.


 

 

Tags :

Share via