அன்னபூரணி தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
கடந்த சில தினங்களாக சமூகவலைதளத்தில் ‘இவர் தான் அம்மன் அவதாரம்’ எனக் கூறி வீடியோ மற்றும் புகைப்படங்கள் வேகமாக பரவத்தொடங்கியது.இதனை அன்னபூரணி அரசு என்ற பெண்ணின் ஆதரவாளர்கள் வெளியிட்டுக்கொண்டிருக்கும் காட்சிகள்,அவரது காலடியில் ஒருவர் கிடந்தது அருள்வாக்கு பெற வரும் நபர்களுக்கு அம்மான்னு சொல்லுடா ..அம்மான்னு சொல்லுடா.. என்று குரலெழுப்பிக் கொண்டே இருக்கும் காட்சிகளும்,ஆண்களும்,பெண்களும் அவரது காலில் விழுந்து ஆசிபெற்று செல்வது போன்ற வீடியோக்கள் பரவலாக உலாவரவே. அவருக்கு எதிராக தனியார் தொலைக்காட்சியில் அவர் தொடர்பாக வெளியான நிகழ்வு குறித்த வீடியோவுடன் ஒரு குரூப் வீடியோ..படங்களை வெளியிடத்தொடங்கியது..சமூக வலைத்தள ஊடகத்தில் அனைத்தும் உலாவரவே இந்து அமைப்புக்கள் காவல்நிலையங்களில் புகார்களை கொடுக்க தொடங்கவே அம்மனின் அவதாரமாக கூறப்பட்ட அன்னபூரணி தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அப்புகாரில், தான் ‘இயற்கை ஒலி’ என்ற அமைப்பு மூலமாக ஆன்மிக பயிற்சி வகுப்புகள் நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னைப் பற்றி சிலர் அவதூறு பரப்பி வருவதாகவும், மாரடைப்பால் இறந்த தன் கணவரின் மரணத்தை ‘மர்ம மரணம்’ என்றும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக சிலர் வதந்தி பரப்புவதாகவும் அன்னபூரணி குற்றம்சாட்டியுள்ளார்.தொடர்ந்து தான் இனி ஆன்மிக சேவையில் ஈடுபடக்கூடாது என சிலர் செல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்துள்ள அவர், தனக்கும் தனது சீடர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறியுள்ளார். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து காவல்துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டுமென அன்னப்பூரணி கேட்டுக் கொண்டுள்ளார்.
Tags :