ஆள் கடத்தல் வழக்கில் சிக்கிய இரண்டாம் நிலை காவலர் கைது.

by Editor / 11-01-2022 01:25:09pm
ஆள் கடத்தல் வழக்கில் சிக்கிய இரண்டாம் நிலை காவலர் கைது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த திருமலை என்பவர் தூசி காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில்  முன்விரோதம் காரணமாக  உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராஜாராம் என்ற இரண்டாம் நிலை காவலர் 4 பேர் கொண்ட கும்பலுடன் தன்னை காரில் கடத்தி கொலை செய்ய முயற்சித்ததாகவும் அவரிடம் இருந்து தப்பித்து வந்து திருமலை தூசி காவல் நிலையத்தில் கொடுத்தார்.அவரது புகாரைத்தொடர்ந்து செய்யாறு சரகத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றிவரும் ராஜாராம் என்பவரை தூசி காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

Tags :

Share via