தென்மாவட்ட ரெயில்களில் கூடுதல் பெட்டிகள்

by Editor / 16-01-2022 03:18:05pm
தென்மாவட்ட ரெயில்களில் கூடுதல் பெட்டிகள்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக பல்வேறு தென்மாவட்ட ரயில்களில் கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்கப்பட இருக்கின்றன.

திருச்செந்தூர் - பாலக்காடு (16732) மற்றும் திருநெல்வேலி - திருச்செந்தூர் (06673) பயணிகள் ரயில்களில் ஜனவரி 14 முதல் ஜனவரி 20 வரை 2 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன. மேலும் இதே காலத்தில் மதுரை - பழனி - கோயம்புத்தூர் (06480/06462) பயணிகள் ரயில்களிலும் ஒரு இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டி கூடுதலாக இணைக்கப்பட உள்ளது. மறுமார்க்கத்திலும் இந்த ரயில்களில் இந்த கூடுதல் பெட்டிகள் ஜனவரி 21 வரை இணைக்கப்பட்டு இயக்கப்படும்.
மேலும் மதுரை - திருவனந்தபுரம் மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் (16343/16344), தாம்பரம் - நாகர்கோவில் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் (22657/22658) ஆகிய ரயில்களில்  ஜனவரி 17 வரை கூடுதலாக தலா ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்பட உள்ளது. மேலும் இதே காலத்தில் சென்னை  எழும்பூர் - குருவாயூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (16127/16128) ரயில்களில் ஒரு இரண்டாம் வகுப்பு பொது பெட்டி இணைக்கப்பட உள்ளது. 
ஜனவரி 16 முதல் 18 வரை தூத்துக்குடியில் இருந்து புறப்படும் சென்னை எழும்பூர் முத்துநகர் எக்ஸ்பிரஸ் (12694), ஜனவரி 17 முதல் 19 வரை சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (12633), ஜனவரி 18 முதல் 20 வரை கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (12634), ஜனவரி 19 முதல் 21 வரை சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் (12693), ஆகியவற்றில் தலா ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்பட உள்ளது.

 

Tags :

Share via