தமிழகத்தில் வரும் 22ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம்

by Editor / 16-01-2022 10:50:35pm
தமிழகத்தில் வரும் 22ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம்

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது, தமிழகத்தில் வரும் 22ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் மையங்களில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

நந்தம்பாக்கம் கரோனா சிகிச்சை மையத்தில் மொத்தம் 700 படுக்கைகள் உள்ளன. நந்தம்பாக்கம் மையத்தில் தற்போது கரோனா நோயாளிகள் 90 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.மேலும், மொத்தமுள்ளவற்றில் 350 படுக்கைகள் காவல்துறையினர், அரசு ஊழியர்கள், அதிகாரிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories