வட்டிக்கு பணம் வாங்கி அதிக வட்டிக்கு கொடுத்து ஏமாந்ததால் உயிரை இழந்த விவசாயி.

by Editor / 20-01-2022 11:19:38pm
வட்டிக்கு பணம் வாங்கி அதிக வட்டிக்கு கொடுத்து ஏமாந்ததால்  உயிரை இழந்த விவசாயி.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மேலச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தங்கவேல், அதே பகுதியைச் சேர்ந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் காசாளர் கருப்பையா என்பவரிடம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் மூன்று லட்ச ரூபாய் வட்டிக்கு வாங்கியுள்ளார். 
 கருப்பையா விடம் பணத்தை பெற்ற தங்கவேல் அதே பணத்தை பரமக்குடியில் சிலரிடம்  கூடுதல் வட்டிக்கு கொடுத்து சம்பாதித்து வந்ததாகவும்கூறப்படுகிறது. ஆனால் தங்கவேல் பணம் கொடுத்த நபர்கள் குறிப்பிட்ட நாட்களில் பணத்தை திருப்பி கொடுக்க முடியாததால்  சிலர் வெளியூர்களுக்கு குடியேறிவிட்டதாக கூறப்படுகிறது.இந்த சூழலில் கருப்பையாவிற்கு அவசரத் தேவை என்பதால் பணத்தை உடனடியாக கேட்டதால் கொடுக்க முடியாத நிலைக்கு தங்கவேல் தள்ளபட்டதால் அவர் பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி தற்கொலை செய்துகொண்டதாககூறப்படுகிறது.இதனைத்தொடர்ந்து  இளஞ்செம்பூர் போலீசார், தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட சில பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்து  கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via