நீதிமன்ற வளாகத்தில் வைத்து சுட்டுக்கொலை

by Admin / 22-01-2022 04:51:10pm
நீதிமன்ற வளாகத்தில் வைத்து சுட்டுக்கொலை


பீகார் மாநிலம் முசாபர்பூரை சேர்ந்தவர் தில்ஷாத் ஹுசைன்.  சொந்தமாக சைக்கிள் கடை நடத்தி வருகிறார். 

இந்நிலையில் அதே பகுதியில் தில்ஷாத் வீட்டுக்கு பக்கத்தில் வசித்து வரும் பகவத் நிஷாத் என்பவருக்கு ஒரு மகள் உள்ளார்.

கடந்த 2020 ஆண்டு பகவத் நிஷாத் வீட்டில் ஆளில்லாததை அறிந்த   தில்ஷாத் ஹுசைன் வீட்டிற்குள் புகுந்து மைனர் மகளை  கடத்திச் சென்றுள்ளார். 

இது குறித்து வழக்குப்பதிவு செய்து தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார்  கடந்த  2021-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐதராபாத்தில் வைத்து கைது செய்ததோடு, கடத்தி சென்ற மைனர் பெண்ணையும் மீட்டனர். 

அதன்பிறகு பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் போலீசார் தில்ஷாத் மீது போக்சோ உள்பட ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் இவர் தரப்பில் ஆஜாரான வழக்கறிஞர் அழைத்தன்பேரில் கோரக்பூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு தில்ஷாத் வந்துள்ளார்.
 
அப்போது  வழக்கறிஞரை சந்திப்பதற்காக  காத்திருந்த தில்ஷாத்தை,  அங்கு வந்த பகவத் நிஷாத். ஆத்திரத்தில் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தில்ஷாத்தின் தலையில் சுட்டு விட்டார்.

இதனால் சம்பவ இடத்திலேயே  தில்ஷாத் உயிரிழந்தார். உடனடியாக அங்கிருந்த  போலீசார்  பகவத் நிஷாத்தை கைது செய்தனர்.

தில்ஷாத்தை பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையே சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

Tags :

Share via