குடியரசு தின தேநீர் விருந்து ரத்து -கவர்னர் மாளிகை தகவல்
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு நாளை மறுநாள் கவர்னர் மாளிகையில் நடைபெறவிருந்த தேநீர் விருந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு வேறு ஒரு நாளில் தேநீர் விருந்து நடத்தப்படும் என்றும் கவர்னர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
Tags :