திருப்பூரிலில் வடநாட்டுபெண் கொலை காவல்துறை விசாரணை

by Editor / 10-02-2022 02:46:57pm
திருப்பூரிலில் வடநாட்டுபெண் கொலை காவல்துறை விசாரணை

திருப்பூரிலிருந்து தாராபுரம் செல்லும் சாலையில் உள்ள பொல்லிக்கபாளையம் பிரிவு அருகே பிரதான சாலையிலுள்ள  கழிவுநீரோடை  கால்வாயில் ஒரு சூட்கேஸ் ஒன்று கிடப்பதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் சூட்கேசை மீட்டதுடன் அதனை திறந்து பார்த்த பொழுது அது உள்ளே சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த பெண்ணின் சடலத்தை 108 ஆம்புலன்சு மூலம் பிரேத பரிசோதனைக்கு  அனுப்பி வைத்து இறந்த பெண் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் எதனால் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் என்பதும்,திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்திற்கு வேலைக்கு வந்ததும் இங்கு சில நபர்களுடன் பழக்கம் ஏற்பட்டு ஒரே வீட்டில் தங்கி இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தொடர்ந்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர் மேலும் அவர் தங்கியிருந்த வீட்டின் அருகிலுள்ள  சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

 

Tags : Police investigation into the murder of a North Indian woman in Tirupur

Share via