வினாத்தாள் வெளியான விவகாரம் -4பேர் மீது வழக்கு பதிவு

by Editor / 17-02-2022 09:11:02am
வினாத்தாள் வெளியான விவகாரம் -4பேர் மீது வழக்கு பதிவு

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அக்ஸிலியம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திருப்பு தேர்வு கணித வினாத்தாள் வெளியானது தொடர்பாக போளூர் கல்வி மாவட்ட அதிகாரி தயாளன் போளூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பள்ளி தாளாளர் நிர்மல்ரோஸ், முதல்வர் கிரேசி பாத்திமா, கணித ஆசிரியர் பிரசாந்த், அலுவலகப் பணியாளர் ஜெனிஃபர் ஆகிய 4 பேர் மீது போளூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

 

Tags : Question paper issue-4 case registered against

Share via