அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று வருகிறோம் ரஷ்ய வீரர்கள் கதறி அழுத வண்ணம் ஒப்புதல் வாக்குமூலம் .

by Admin / 03-03-2022 02:18:40pm
அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று வருகிறோம் ரஷ்ய வீரர்கள் கதறி அழுத வண்ணம் ஒப்புதல் வாக்குமூலம் .

தாங்கள் போருக்கு அனுப்பப்படுவதாக தங்களுக்குத் தெரியாது என்றும் அப்பாவி பொதுமக்களை கொன்று வருவதாகவும் ரஷ்ய ராணுவ வீரர்கள் பேட்டி அளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

உக்ரைன் வீரர்களால் சிறைபிடிக்கப்பட்ட  ரஷ்ய வீரர்கள் கதறி அழுத வண்ணம் வாக்குமூலம் கொடுத்தனர்.

அதில் அமைதியாக வாழும் மக்கள் மீது தாக்குதல்  நடத்துவதாகவும் தாங்கள் பீரங்கிகள் தீவனமாக மாறி விட்டதாகவும் தெரிவித்தனர்.

 ரஷ்ய ராணுவத்தினர் தங்கள் சக வீரர்களை சடலங்களை கூட எடுப்பதில்லை என்றும் இறுதி சடங்கு செய்வது கூட இல்லை என்றும் பிடிபட்ட ரஷ்ய வீரர்கள் ஆதங்கப்பட்டார்

 

Tags :

Share via