உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும்-தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்

by Admin / 05-03-2022 12:31:30am
உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும்-தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்

 


நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக்கூட்டணி
பெற்ற வெற்றி மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்தது.

இதைத்தொடர்ந்து ,கூட்டணிக்கட்சிகளுக்குள் நடத்திய பேச்சுவார்த்தை தோழமை உணர்வுடன் அமைந்து
அனைவரும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் பங்கீடாக அமைந்ததும் அதிககளவு மகிழ்ச்சியை அளித்தது.
அந்த மகிழ்ச்சியைச்சீர்குலைக்கும் வகையில்,மறைமுகத்தேர்தலில் சில இடங்களில் நடந்த நிகழ்வுகள்
என்னை மிகவும் வருத்தமடைய வைத்துள்ளது.வெற்றியை நினைத்தே கவலை அடைய வைக்கிறது.

பேரறிஞர்  அண்ணா சொன்ன "கடமை-கண்ணியம்-கட்டுப்பாட்டில்" மூன்றாவதாகச்சொல்லப்பட்ட கட்டுப்பாடுதான்
மிக மிக முக்கியமானது என்று தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி சொல்வார்கள்.அந்தக் கட்டுப்பாட்டை சிலர்
காற்றில் பறக்கவிட்டு  தோழமைக்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளில் உட்கார்ந்திருக்கிறார்கள்.ஏதோ சாதித்து
விட்டதாக அவர்கள் நினைக்கலாம்.ஆனால் கழகத்தலைவர் என்றமுறையில் குற்ற உணர்ச்சியால்,நான் குறுகி நிற்கிறேன்.
மதச்சார்பற்ற முற்போக்குக்கூட்டணிக்கட்சித்தலைவர்களிடம் ,நான் எனது மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.எந்தத்தோழமை உணர்வு நமக்கு மக்கள் மனதில் நல்லெண்ணம் உருவாக்கியதோ அந்த தோழமை உணர்வை எந்தக் காலத்திலும் உஞக்குலைந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

கழகத்தலைவர் அறிவித்ததை மீறி தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு
வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும்.விலகாவிட்டால் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று கழகத்தலைவர்  என்ற முறையில் எச்சரிக்கறேன்.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு விட்டு ,கழகத்தின் நற்பெயருக்கே களங்கம் விளைவித்தவர்கள்
அந்தப்பொறுப்பை விட்டு விலகிவிட்டு .என்னை வந்து சந்தியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். மாவட்ட கழகச்செயலாளர்கள்/பொறுப்பாளர்கள் இதற்குரிய நடவடிக்கையில் விரைந்து ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

 

Tags :

Share via