ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளை காலை புதிய மேல் சாந்தி தேர்வு நடைபெறும்.

கேரளாவில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குத்தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில்இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகிறார்கள்.சபரிமலையில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மண்டல பூஜை நடைபெறும். அதைத் தொடர்ந்து தை மாதம் மகரவிளக்கு பூஜை நடைபெறும்.மேலும், ஒவ்வொரு மாதமும் மலையாள மாதப் பிறப்பை ஒட்டி ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் சிறப்புப் பூஜைகளும் நடைபெறும். அதன்படி ஐப்பசி மாத பூஜைக்காக இன்று மாலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையைத் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துகிறார். தொடர்ந்து நாளை முதல் 22ஆம் தேதி வரை 5 நாள்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.
முதல் நாளான இன்று எந்தவொரு சிறப்புப் பூஜையும் நடக்காது. நாளை முதல் வழக்கமான பூஜைகளுடன், நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், களசாபிஷேகம், சகஸ்ர காசாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை நடைபெறும்.
காலை 7:30 மணிக்கு உஷ பூஜை நிறைவு பெற்றதும் கார்த்திகை ஒன்றாம் தேதி முதலான ஒரு ஆண்டு காலத்துக்கான புதிய மேல் சாந்தி தேர்வு நடைபெறும்.திருவிதாங்கூர் தேவசம்போர்டு நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார். இதே முறையில் மாளிகைப்புரம் மேல் சாந்தியும் தேர்வு செய்யப்படுவார்.2023 to 2024 சபரிமலை மேல்சாந்தி மற்றும் மாளிகைபுரம் மேல்சாந்தி தேர்வு செய்வதற்காக பந்தள அரண்மனையில் இருந்து நிருபமா ஜி வர்மாவும் வைதேயும் ஆகியோர் இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலை புறப்பட்டனர்.தொடர்ந்து 22ஆம் தேதி இரவு 10 மணியளவில் ஐயப்பன் கோயிலின் நடை அடைக்கப்படும். தரிசனத்திற்கான முன்பதிவு இணையதளம் மூலம் நடைபெற்று வருகிறது. மேலும் பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் பகுதியில் தற்காலிக முன்பதிவு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.இந்தாண்டு ஐப்பசி மாதத்தில் ஸ்ரீ சித்ர ஆட்ட திருநாள் பூஜைக்காக நவம்பர் 10, 11 தேதிகளில் நடை திறக்கப்படும். அதேபோல மண்டல பூஜைக்காக வரும் நவம்பர் 16 முதல் டிசம்பர் 27 வரை நடைதிறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags :