4வது அலை கருத்துக்களை புறந்தள்ள முடியாது அனைவரும் தடுப்பூசி போடுவது தான்தீர்வு-அமைச்சர் மா. சுப்பிரமணியன்

by Editor / 20-03-2022 08:31:08am
4வது அலை கருத்துக்களை புறந்தள்ள முடியாது அனைவரும் தடுப்பூசி போடுவது தான்தீர்வு-அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்:அப்போது அவர் தெரிவித்ததாவது:

கொரோனா நான்காவது அலை ஏற்படும் என கான்பூர் ஐஐடி தெரிவித்துள்ளது. மேலும் ஆசிய நாடுகள் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வேகமாக பரவி உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. எனவே நான்காவது அலை பரவுவது குறித்து கருத்துக்களை புறந்தள்ளிவிட முடியாது இதற்கு ஒரே தீர்வு அனைவரும் தடுப்பூசி போடுவது தான்.

உக்ரேனில் இருந்து வந்த மாணவர்களுக்கு அவர்கள் கல்வியை தொடர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக அரசும் அதில் கவனம் செலுத்தி வருகிறது. மேலும் ஏராளமான மாணவர்கள் போலந்து நாட்டில் கல்வி கற்க  விருப்பம் தெரிவித்துள்ளனர் அவருடைய கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டு அவர்கள் கல்வி தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

 

Tags : 4th wave comments cannot be ruled out Everyone is vaccinated Self-determination-Minister Ma. Subramanian

Share via