மன்னிப்பு கேட்க முடியாது: உதயநிதி திட்டவட்டம்
சனாதனம் விவகாரத்தில் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர், "இந்தியா முழுவதும் பாஜகவினர் என் மீது புகார் அளித்து வருவதை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். ஜனாதிபதி திரௌபதி முர்முவை புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு அழைக்காதது தான் சனாதனத்துக்கான உதாரணம்" என்று கூறினார். சமீபத்தில் சனாதன மதம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசிய கருத்துக்கள் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
Tags :