ஆயுள் கைதி மின்சாரம் தாக்கி சாவு.சாவில் மர்மம் எனக்கூறி உடலை வாங்க மறுத்து சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி, இவர் விருதுநகர் மாவட்டம்
சாத்தூர் தாலுகா காவல் நிலையவழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே புரசடை உடைப்பு திறந்த வெளிச் சிறை சாலை ஆயுள் கைதியாக இருந்து வருகிறார். இந்நிலையில் கருப்பசாமி சிறைச் சாலையில் காவலர்களை மிரட்டுவதற்காக மின் கம்பத்தில் உள்ள கம்பியை பிடித்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கைதி கருப்பசாமி தலையில் மின்கம்பம் பட்டபோது அவர் மீது உயர்மின் அழுத்தம் தாக்கியதாக கூறப்படுகிறது. தகவலறிந்த சிறை காவலர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக காளையார்கோவில் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் ஆயுள் கைதி கருப்பசாமி பரிதாபமாக உயிரிழந்தார். சிறை துறையில் இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று கைதி கருப்பசாமியின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரிடம் சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர் இதனையடுத்து மாவட்ட எஸ்பி மாவட்ட நீதிபதி சிவகங்கை அரசு மருத்துவமனை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
Tags : District Collector petitions to refuse to buy body of life prisoner