சென்னையில் பரிதாபம்,  மின்மாற்றியில் கார் மோதி  உயிரோடு  ஓட்டுநர் கருகி சாவு

by Editor / 18-05-2021 05:18:59pm
 சென்னையில் பரிதாபம்,   மின்மாற்றியில் கார் மோதி   உயிரோடு  ஓட்டுநர் கருகி சாவு

 

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் அதிவேகமாக வந்த கார் மின்மாற்றியில் மோதி விபத்திற்குள்ளானதில், காரில் வந்தவர் உடல் கருகி உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது.

சென்னையில் உள்ள பள்ளிக்கரணை பகுதியில் அதிவேகத்துடன் சொகுசு கார் ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த கார் எதிர்பாராத விதமாக அங்குள்ள மின்மாற்றியில் பலமாக மோதியது. அதிவேகத்தில் கார் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில், மின்மாற்றியில் கார் மோதி விபத்திற்குள்ளானதும், காரில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. காரில் இருந்தவர் வெளியே வர முயற்சித்தும் பலனில்லாமல் போகவே, காரோடு உயிருடன் எரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியாகினார்.

விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர். மின்மாற்றியில் மோதி கார் விபத்திற்குள்ளானதும் மின்சாரமும் அப்பகுதியில் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நீரை பாய்ச்சி காரில் இருந்த தீயை அணைத்த தீயணைப்பு படையினர், காரில் இருந்த நபரின் உடலை மீட்டனர். காவல் துறையினர் விபத்திற்குள்ளாகி உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அவர் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via