போலீஸ் பாதுகாப்புடன் இளைஞர்களின் ஆட்டங்களுடன் விநாயகர் சிலை ஊர்வலம்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இந்து முன்னணி சார்பில் ஒன்றிய பகுதிகளில் இருந்து சுமார் 60க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஒட்டன்சத்திரம் செக் போஸ்டில் இருந்து தாராபுரம் சாலை வழியாக ஏ. பி. பி .நகரில் உள்ள விநாயகர் கோவில் வரை சென்று இந்த ஊர்வலம் முடிவுற்றது. அதனைத் தொடர்ந்து பழனி சாலையில் உள்ள தலையூற்று நீர்வீழ்ச்சியில் இந்த சிலைகள் அனைத்தும் இன்று இரவு விஜர்சனம் செய்யப்பட்டன.இந்த ஊர்வலத்தை இந்து முன்னணி மாநில செயலாளர் சி. பி .சண்முகம் தலைமையில் துவங்கப்பட்டு ஊர்வலம் நடைபெற்றது இந்த ஊர்வலத்திற்கு ஒட்டன்சத்திரம் போலீசார் பாதுகாப்பு வழங்கினர் அதனைத் தொடர்ந்து ஒன்றிய பகுதிகளில் இருந்து வந்த இளைஞர்கள் தாரை தப்பட்டை உடன் பலத்த ஆட்டங்களுடன் ஊர்வலமாக சென்றனர் இந்த ஊர்வலத்தில் வேறு எந்த விதமான அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :