திருச்சியிலிருந்து சென்னைக்கு 40 லட்சம் பணத்துடன் சென்ற ஆதிதிராவிட நலத்துறை அதிகாரி கைது.

by Editor / 30-03-2022 04:39:59pm
திருச்சியிலிருந்து  சென்னைக்கு 40 லட்சம் பணத்துடன் சென்ற ஆதிதிராவிட நலத்துறை அதிகாரி கைது.

விழுப்புரம் ஆதிதிராவிட நலத்துறையில் திருச்சியை சார்ந்த துணை ஆட்சியராக உள்ள சரவணகுமார் என்பவரிடம் லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார்  பிற்பகல் 2: 30 மணியளவில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கெடிலம் அருகே சரவணக்குமார் சென்ற காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது அவரது காரிலிருந்து  பைகளில் கட்டு கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த 500 ரூபாய் நோட்டுகள் சுமார் ரூ 40 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரையும், கார் டிரைவராக இருந்த குளித்தலையை சேர்ந்த மணியையும் விழுப்புரம் பழங்குடியின அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். எங்கெங்கிருந்து பணம் வசூலிக்கப்பட்டது. பணம் எங்கு கொண்டு செல்லப்படுகிறது.இவ்வளவு பணம் இவரிடம் யார் கொடுத்தது.வேலைவாய்ப்புக்காக பெற்றாரா..இல்லை மாவட்டத்திலுள்ள காலியிடங்களை நிரப்பு பெற்ற பணமா  என்பது குறித்து விசாரணை நடக்கிறது.

 

Tags : 40 லட்சம் பணத்துடன் சென்ற ஆதிதிராவிட நலத்துறை அதிகாரி கைது.

Share via