கார்கிவ் புறநகர் பகுதியை மீட்டதாக உக்ரைன் ராணுவம் தகவல்

by Staff / 31-03-2022 04:24:27pm
கார்கிவ்  புறநகர் பகுதியை மீட்டதாக  உக்ரைன் ராணுவம் தகவல்

கார்கிவ்  புறநகரின் முக்கிய சாலைகள் ரஷ்ய படைகளிடம்  இருந்து மீட்டதாக  ராணுவம் தெரிவித்துள்ளது.

இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்   புறநாகரில் ச்சூகுவி என்று பகுதியை இணைக்கும் முக்கிய சாலையான மாலா ரோகன் கிராமத்தை ரஷ்யப் படைகள் கைப்பற்றிய இருந்ததாகவும் மூன்று நாட்களாக நடந்த கடும் போருக்குப் பின் ரசிய படைகளைப் பின்வாங்கச் செய்து அப்பகுதி கைப்பற்றியதாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

சோர்வடைந்த ரஷ்ய வீரர்கள் 40 பேர் பிடித்துள்ளதாம் சில ரஷ்ய வீரர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரஷ்ய வீரர்களின்  தாக்குதலாக உறைந்து கிடக்கும் நகரில் சீரமைப்பு பணியை முன்னெடுத்து உள்ளதாகவும் நிர்வாக பணிகளுக்கான வேலைகள் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via