மெக்சிகோவுக்கு கடத்தப்படவிருந்த 104 சிலந்திகள் பறிமுதல்

by Staff / 01-04-2022 04:42:38pm
மெக்சிகோவுக்கு கடத்தப்படவிருந்த 104 சிலந்திகள் பறிமுதல்

பொகடோ  சர்வதேச விமான நிலையம் வழியாக மெக்சிகோவுக்கு கடத்தப்பட இருந்த 140 சிலந்திகளை கொலம்பிய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

அங்குள்ள சரக்குப் பெட்டிகளை சோதனை செய்யும்போது வெளிநாட்டு பொருட்கள் இருப்பதாக பார்சல் நிறுவனத்திடம் இருந்து வந்த குறிப்பினை பார்த்து அதிகாரிகள் அதனை சந்தேகத்தின் பெயரில் சோதனை செய்தனர் .

அப்போது அந்தப் பெட்டியில் 140 பிளாஸ்டிக் பைகளில் சிலந்திகளை தனியாக அடைத்து வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

அவைகளின் 132   சிலந்திகள் உயிருடன் இருப்பதும் 12 சிலந்திகள் உயிரிழந்து இருப்பதும் தெரிய வந்தது அந்த சரக்கு உரிய அனுமதி பெறாமல் வந்திருப்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via