திமுகவின் மூத்த அமைச்சர் துரைமுருகன் உடனே பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்-அப்துல் ரஹிம் 

by Editor / 16-02-2022 11:59:23pm
திமுகவின் மூத்த அமைச்சர் துரைமுருகன்  உடனே பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்-அப்துல் ரஹிம் 

 

திமுகவின் மூத்த அமைச்சர் துரைமுருகன் அவர்களின் ஆணவ பேச்சு   தொடர்வதை உடனே நிறுத்த வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக எச்சரிக்கிறோம்  .. 

ஏற்கனவே செய்தியாளர் சந்திப்பில் திமுகவை சேர்ந்த முஸ்லிம் ஒருவரை பார்த்து ஏ தொப்பி என அழைத்து கேவலமான சிரித்தது உட்பட அடிக்கடி முஸ்லிம்களை சீண்டி பார்ப்பது தொடர் கதையாகி வரும் நிலையில்.. 

வாணியம்பாடியில்  நேற்று முன்தினம் தேர்தல் பிரச்சாரத்தின் போது அமைச்சர் துரைமுருகன் திமுக வெற்றி பெறாவிட்டால் வாணியம்பாடி நகரம் அடுத்த  5 ஆண்டுகள் புறக்கணிக்கப்படும் என எச்சரிப்பதாக கூறியுள்ளார்.. 

மூத்த அமைச்சரும் பொதுச்செயலாளருமான துரைமுருகன் அவர்கள் தொடர்ந்து முஸ்லிம்களை கேவலமான முறையில் விமர்சனம் செய்வதையும் முஸ்லிம்களை எச்சரிப்பதையும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் .. 

அமைச்சர் துரைமுருகன் அவர்கள் வாணியம்பாடி வாக்காளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்றாலும் அங்கு வாழும் பெரும்பான்மை முஸ்லிம்களை அச்சமூட்டும் வகையில் பேசியதை உடனே மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் இந்திய தேசிய லீக் கட்சி வேலூர் மாவட்டம் சார்பாக காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீடு முற்றுகை போராட்டம் நடத்தப் படும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம் .

அன்புடன் 
தடா ஜெ அப்துல் ரஹிம் 
இந்திய தேசிய லீக் கட்சி
மாநில தலைவர்..

 

Tags :

Share via