அங்கன்வாடி கட்டிடத்தில் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் சிறுவன் காயம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுக்கா பூனி மாங்காடு காலனியில் 35 மாணவர்கள் படிக்கும் அங்கன்வாடி கட்டிடத்தில் திடீரென மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் பள்ளியில் படுத்திருந்த விமல்ராஜ் என்ற குழந்தைக்கு தலையில் காயம்பட்டு படுகாயமடைந்து திருத்தணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் அதே பள்ளியில் அங்கன்வாடியில் இருந்து தீரன் என்று மற்றொரு மாணவனும் சிறிய காயத்துடன் தப்பியுள்ளார். மேலும் மேற்கூரை பெயர்ந்து விழுந்த போது பள்ளியில் 25 மாணவர்கள் இருந்துள்ளனர். அவர்கள் இந்த விபத்தில் சிக்காமல் தப்பி உள்ளனர். சம்பவ இடத்தில் வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை செய்தனர்.பழுதடைந்த அங்கன்வாடி கட்டடத்தை உடனடியாக அகற்றி புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்று அந்த அங்கன்வாடி பள்ளியில் உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Tags : The boy was injured when the roof of the Anganwadi building collapsed