சிறுமிக்கு பாலியல் தொல்லை
கேரள மாநிலம் கொல்லம் சடையமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சம்சுதீன் (வயது 77). இவரது வீடு அருகே ஒரு குடும்பத்தினர் வசித்து வந்தனர். அவர்களுக்கு 6 வயதில் மகள் உள்ளார். சிறுமியின் தாயும், தந்தையும் வேலைக்கு சென்று விடுவார்கள்.இதனால் வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருப்பார். அப்போது சிறுமி வீட்டிற்கு அருகே விளையாடி கொண்டிருப்பார்.
இதனை பார்த்த சம்சுதீன் அந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அன்று மாலையில் வீடு திரும்பிய பெற்றோரிடம் இதுபற்றி சிறுமி கூறி அழுதார்.அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுபற்றி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் சம்சுதீன், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.பின்னர் போக்சோ வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
Tags :



















