சித்திரை திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு-11 பேர்காயம்-அமைச்சர் பேட்டி
மதுரை சித்திரை திருவிழா கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் லட்சக்கணக்கான மக்கள் கள்ளழகரை காண வந்தனர். இதில்கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் பலியாகினர். அவர்களின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் உள்ள பிணவறை வைக்கப்பட்டு உள்ளது. 11 பேர் காயம் அடைந்து உள்ளனர். இறந்த 2 நபர்களில் ஒரு நபர் தேனியைச் சேர்ந்த செல்வம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 10 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளரிடம் தெரிவித்தார்.
Tags : 2 killed, 11 injured in Chithirai festival