மே 1-ந்தேதி முதல் ஆட்டோ, பஸ், டாக்சி கட்டணம் உயர்வு

by Staff / 21-04-2022 02:38:51pm
 மே 1-ந்தேதி முதல் ஆட்டோ, பஸ், டாக்சி கட்டணம் உயர்வு

கேரளாவில்நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்ததை தொடர்ந்து பஸ், ஆட்டோ, டாக்சி கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கேரளாவைச் சேர்ந்த ஆட்டோ, டாக்சி தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் அரசு பஸ்சில் குறைந்த பட்ச கட்டணத்தை ரூ.10-ல் இருந்து ரூ.12-ஆகவும், விரைவு பஸ்களில் குறைந்த பட்ச கட்டணத்தை ரூ.14-ல் இருந்து ரூ.15-ஆகவும், அதிவிரைவு பஸ்களில் குறைந்த பட்ச கட்டணத்தை ரூ.20-ல் இருந்து ரூ.22 ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டது.

இது தொடர்பாக நேற்று கேரள மந்திரிசபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் பஸ், ஆட்டோ, டாக்சி கட்டண உயர்வுக்கு ஒப்புதல் அளிக்க முடிவு செய்யப்பட்டது. கட்டண உயர்வு வருகிற மே மாதம் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

 

Tags :

Share via