உக்ரைன் ரஷ்யா போர் ஒரு முடிவுக்கு வருவதற்கு அழைப்பு விடுத்த அதிபர் ஜோகோ

by Staff / 30-04-2022 03:24:33pm
உக்ரைன் ரஷ்யா போர் ஒரு முடிவுக்கு வருவதற்கு அழைப்பு விடுத்த அதிபர் ஜோகோ


உக்ரைன் ரஷ்யா இடையே போர் நீடித்து வரும் நிலையில் இரு நாட்டு அதிகாரிகளும் வருகிற நவம்பர் மாதம் இந்தோனேசியாவில் நடைபெறும் ஜி-20 உச்சிமாநாடு கலந்து கொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலே குறிப்பிட்ட அறைகளாக கொண்ட ஜி-20 அமைப்பு ரஷ்யாவும் உறுப்பினராக உள்ளது. உக்ரைன் மீது போர் காரணமாக ரஷ்யாவை ஜி20 கூட்டமைப்பில் இருந்து வெளியேற்ற வேண்டும் என உறுப்பு நாடுகள் பலவும் வலியுறுத்தும் நிலையில் சில உறுப்பினர்கள் ரஷ்யாவுக்கு ஆதரவளித்து வருகின்றனர். இந்த சமயத்தில் வருகிற நவம்பர் மாதம் இந்தோனேசியாவில் நடைபெற உள்ள ஜி-20 உச்சிமாநாடு கலந்துகொள்ள ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூறிய இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ தன்னுடைய அழைப்பை ஏற்றுக் கொண்டதாக ரஷ்யாவும் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தியதாகவும் கூறியிருக்கிறார் மேலும் இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவரும் கலந்து கொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via