அரசுப் பேருந்து மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து சரக்கு வாகனம் நடந்து சென்ற பெண் மீது மோதி இழுத்துச் சென்றது

by Staff / 30-04-2022 05:09:57pm
அரசுப் பேருந்து மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து சரக்கு வாகனம் நடந்து சென்ற பெண் மீது மோதி இழுத்துச் சென்றது

கேரளாவில் அரசு பேருந்து பின்னால் பின்பக்கமாக மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து சரக்கு வாகனம் தறிகெட்டு ஓடி சாலையோரம் நடந்து சென்ற பெண் மீது மோதி இழுத்துச் சென்ற காட்சிகள் சிசிடிவி பதிவாகியுள்ளன. பாலக்காடு நோக்கி சென்ற அரசு பேருந்து வேரிக்கடு   பகுதியில் அதிவேகமாக வளைவில் திரும்பியபோது முன்னே சென்ற சரக்கு வாகனத்தின் பின் பக்கமாக மோதியுள்ளது. சரக்கு வாகனம் வேகமாக சென்ற நிலையில் பேருந்து மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் தறிகெட்டு ஓடி சாலையோரம் நடந்து சென்ற பெண் மீது மோதி இழுத்துச் சென்றவாரூ  சாலையோர கடைக்குள் புகுந்தது .இதில் படுகாயம் அடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சரக்கு வாகன ஓட்டுனர் மற்றும் கிளீனர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர் .கடையின் முன் பகுதியில் இருந்த மரத்தின் மீது மோதி சரக்கு வாகனம் நின்றதால் கடைக்குள் இருந்த கடைக்காரர் உயிர் தப்பினார்.

 

Tags :

Share via