அரசு பள்ளியில் நடந்த மோதலில் அரசு பள்ளி மாணவர் உயிரிழப்பு.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 25 ம் தேதி இரு பிரிவாக மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், பலத்த காயம்பட்ட மாணவர் செல்வ சூர்யா நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். அரசு பள்ளி மாணவர் செல்வ சூர்யா அடித்து கொலை செய்த வழக்கில் அதே பள்ளியில் படிக்கும் மூன்று மாணவர்களை பாப்பாக்குடி காவல்துறையினர் கைது செய்தனர் பாப்பாக்குடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :