அம்மோனியா வாயு கசிவு -ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் மா.. சுப்பிரமணியன் நலம் விசாரித்தார்

by Admin / 27-12-2023 06:10:21pm
அம்மோனியா வாயு கசிவு -ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் மா.. சுப்பிரமணியன் நலம் விசாரித்தார்

சென்னை எண்ணூர் கோரமண்டல் உரத் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய அம்மோனியா வாயு கசிவால் 30க்கும் மேற்பட்டோர் மூச்சு திணறியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்., பெருமாள் என்பவர்பாய்லர் வெடித்து உயிரிழந்து உள்ளார். .ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.. சுப்பிரமணியன் நலம் விசாரித்தார்..இந்நிலையில் தொழிற்சாலையை தமிழ்நாடு அரசு தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளதோடு வாய்வு கசிவதற்கான காரணத்தை கண்டறிய அமைக்கப்பட்ட ஆய்வு குழு தாக்கல் செய்யும் அறிக்கை அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. கடலில் அமைத்துள்ள திரவ அமோனியா வாயு  குழாயிலிருந்து அம்மோனியா கசிந்ததாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது.. தொழிற்சாலை வாசலில் காற்றில் நானூறு மைக்ரோகிராம்/M3 இருக்க வேண்டிய அமோனியா 20 90 மைக்ரோ கிராம்/M3 இருந்ததாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் அளித்துள்ளது..

அம்மோனியா வாயு கசிவு -ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் மா.. சுப்பிரமணியன் நலம் விசாரித்தார்
 

Tags :

Share via