அரசு பேருந்து மோதி இறுதி ஆண்டு பயிலும் மருத்துவ மாணவன் பலி.

by Editor / 03-05-2022 08:28:24pm
அரசு பேருந்து மோதி  இறுதி ஆண்டு பயிலும் மருத்துவ மாணவன் பலி.

காரைக்குடி சுப்ரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் இவரது மகன் சண்முகம். இவர் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் கல்லூரியில் இருந்து மதுரை சென்றுவிட்டு மீண்டும் கல்லூரி நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் திரும்பியுள்ளார். படமாத்தூர் அருகே வரும்போது எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே மாணவன் சண்முகம் உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய பூவந்தி காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் குறித்து விசாரனை மேற்கொண்டுவருகின்றனர்.

 

Tags :

Share via