நடுவானில் மதுபோதையில் பயணி பணிப் பெண்ணிடம் ரகளை செய்தால் மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கம்

by Staff / 17-05-2022 11:52:16am
நடுவானில் மதுபோதையில் பயணி பணிப் பெண்ணிடம் ரகளை செய்தால் மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கம்

நடுவானில் மதுபோதையில் பயணி செய்த ரகளையால் பெங்களூர் வரவேண்டிய விமானம் மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தோகாவில் இருந்து வந்த விமானத்தில் மது போதையில் இருந்த பயணி பணிப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் .சக பயணிகளுடன் சண்டை விட்டதாகவும் கூறப்படுகிறது. பயணியின் ரகளையால் விமானம் மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது சம்பவம் தொடர்பாக கேரளாவை சேர்ந்த சர்புதீன் உல்வார்  என்பவரை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via