காவிரி நீரை பெற்றுத் தர முதல்வர் தவறிவிட்டார்- ஜிகே வாசன்

by Editor / 28-07-2024 10:16:35pm
காவிரி நீரை பெற்றுத் தர முதல்வர் தவறிவிட்டார்- ஜிகே வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கர்நாடகாவிற்கு நேரடியாக சென்று காவிரி நீரை பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவறிவிட்டார். இப்படி தண்ணீர் கேட்டு பெற்றுத் தராதது விவசாய மக்களுக்கு செய்த பெரும் துரோகம். தற்போது மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை கடைமடைக்குச் செல்லும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

 

Tags : காவிரி நீரை பெற்றுத் தர முதல்வர் தவறிவிட்டார்- ஜிகே வாசன்

Share via