தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு-மீனவர்களுக்கு எச்சரிக்கை
தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரியில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,மேலும் தருமபுரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கரூர், திருச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூரில், கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் மன்னார் வளைகுடா கடல் தென்மேற்கு வங்கக்கடலில் 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tags : Fishermen warned of heavy rains in 17 districts in Tamil Nadu today