பெருவில் 37 ஆண்டுகளுக்குப் பின் இறந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

by Staff / 20-05-2022 02:27:32pm
பெருவில் 37 ஆண்டுகளுக்குப் பின் இறந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

பெருவில் 37 ஆண்டுகளுக்கு முன்பு போராளிகள் என கருதி சுட்டுக்கொல்லப்பட்ட கிராம மக்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. 1985ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அக்கோமர்க்க மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இடதுசாரி கொரில்லா போராளி உள்ளதாக கருதி ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருபத்தி மூன்று சிறுவர்கள் உட்பட 69 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பல ஆண்கள் இராணுவத்தினர் சுட்டுக் கொன்றுவிட்டு உடல்களை எரித்து விட்டதாக கூறப்படுகிறது .37 ஆண்டுகளுக்குப் பின் இறந்தவர்கள் உடல்களில் எஞ்சிய பாகங்கள் உறவினர்களிடம் ஒப்படைக் கப்பட்டுள்ளன.

 

Tags :

Share via