6 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை  வானிலை மையம் அறிவிப்பு 

by Editor / 25-05-2021 05:34:04pm
6 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை  வானிலை மையம் அறிவிப்பு 


 

வெப்பச் சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக, கன்னியாகுமரி, மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டி உள்ள கோவை, தேனி, நெல்லை, தென்காசி, திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில்  இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. மேலும் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
மே 26ஆம் தேதி முதல் மே 29ஆம் தேதி வரை கன்னியாகுமரி, மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.வட தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தரைக்காற்று மணிக்கு 30-40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு (சென்டிமீட்டரில்)தக்கலை (கன்னியாகுமரி), நாகர்கோயில் (கன்னியாகுமரி), முதுகுளத்தூர் (ராமநாதபுரம் ), நாகர்கோயில்(கன்னியாகுமரி) ஆகிய ஊர்களில் தானியங்கி மழைமானியில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

 

Tags :

Share via