24ஆம் தேதி நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் ரஷ்ய அதிபர் மற்றும் சீன அதிபர் ஆகியோர் உடன் பிரதமர் மோடி காணொலி பேச்சு

by Staff / 28-05-2022 01:30:39pm
24ஆம் தேதி நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் ரஷ்ய அதிபர் மற்றும் சீன அதிபர் ஆகியோர் உடன் பிரதமர் மோடி காணொலி பேச்சு

 ஜூன் 24-ஆம் தேதி நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருடன் பிரதமர் மோடி காணொலி பேச்சு நடத்தவுள்ளார் உச்சிமாநாடு சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் ஜூன் 24ஆம் தேதி காணொளி வாயிலாக நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ரஷ்யா மற்றும் சீன அதிபருடன் பிரதமர் மோடி உரையாடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உக்கிரன் மீது ரஷ்ய படை எடுப்பை படை எடுத்த பின்னர் புதினுடன் மோடி உரையாடவும் இந்த மாநாடு வழிவகுக்கிறது உக்ரைன் போர் நிறுத்த வேண்டும் என்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என்றும் இந்தியா ஏற்கனவே வலியுறுத்தி வருகிறது. இந்த மாநாட்டின்போது அதிபர் புதினை மோடி மீண்டும் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற சீன அதிபர் ஜி ஜின்பிங் பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி குறித்து வலியுறுத்தியுள்ளார். உலகளாவிய பாதுகாப்பு என்ற சீனாவின் கொள்கைக்கு அவர் பிரிக்ஸ் நாடுகளின் ஆதரவை இந்த மாநாடு மூலம் கோரா  உள்ளார். இந்தியாவுடன் தொடர்ந்து எல்லை பிரச்சினை நீடிக்கும் போது சீனா முக்கிய பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது இந்தியாவும் சீனாவும் எல்லையில் கொண்ட நிலைப்பாடு பல சுற்றுப் பேச்சு களுக்குப் பிறகும் நீடிக்கிறது.

 

Tags :

Share via