காங்கோவில் வைரச் சுரங்கத்தில் கற்கள் சரிந்து விழுந்து விபத்து 40 பேர் பலி

by Staff / 10-06-2022 02:58:36pm
காங்கோவில் வைரச் சுரங்கத்தில் கற்கள் சரிந்து விழுந்து விபத்து 40 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் வைரச்சுரங்கம் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கி 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.கின்சா  நகரில் செயல்பட்டு வரும் வைர சுரங்கத் தொழிலாளர்கள் வைரத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி கொண்ட தொழிலாளர்களை மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது மற்றவர்களின் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via