விழுப்புரம் நகராட்சி பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்த மாவட்ட ஆட்சியர்

by Staff / 11-06-2022 02:38:51pm
விழுப்புரம் நகராட்சி பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்த மாவட்ட ஆட்சியர்

நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதையொட்டி விழுப்புரம் நகராட்சி பள்ளியில் உள்ள கழிப்பறை அசுத்தமாக இருந்த சிங்குகளை தனது கைகளால் ஸ்கிரப்பர் வைத்து தேய்த்து கழுவி தூய்மை பணிகளை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். சம்பிரதாயத்திற்காக மேலோட்டமான பணிகளாக இல்லாமல் இப்படித்தான் முறையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி அவர் கரும்பலகையில் பெயிண்ட் அடித்து உறுதிப்படுத்தினார். தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிற்கிணங்க தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் தூய்மை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

 

Tags :

Share via