தமிழகத்தில் மேலும் 4 ஐஏஎஸ்  அதிகாரிகள் பணியிட மாற்றம்

by Editor / 27-05-2021 06:38:45pm
தமிழகத்தில் மேலும் 4 ஐஏஎஸ்  அதிகாரிகள் பணியிட மாற்றம்

 


ஆசிரியர் தேர்வாணைய தலைவர் உட்பட தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது
:1. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நசிமுதீன் மாற்றப்பட்டு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.2. ஆசிரியர் தேர்வாணைய தலைவர் எல் நிர்மல் ராஜ் மாற்றப்பட்டு புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.3. பொது மற்றும் மறுவாழ்வு துறை சிறப்புச் செயலர் வெங்கடேஷ் மாற்றப்பட்டு கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.4. புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் சுப்பிரமணியம் மாற்றப்பட்டுள்ளது டாஸ்மாக் மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.- இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே 21 ஐஏஎஸ் அதிகாரிகளும்,  6 ஐஏஎஸ் அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via