கல்வி அதிகாரி மயங்கி விழுந்து பலி

by Editor / 16-06-2022 04:38:34pm
கல்வி அதிகாரி மயங்கி விழுந்து பலி

தென்காசி மாவட்டத்தின் 4வது புதிய ஆட்சித்தலைவராக இன்று பொறுப்பேற்ற ஆகாஷை மரியாதை நிமித்தமாக சந்திக்க சங்கரன்கோவில் கல்வி மாவட்ட கல்வி அதிகாரி சுப்ரமணியன் என்பவர் ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருந்த பொழுது அவருக்கு தீடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கிவிழுந்தார். இதனைத்தொடர்ந்து அங்கு இருந்த அதிகாரிகள் குழுவினர் அவசர அவசரமாக அவரை ஆட்சித்தலைவர் அலுவலகம் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் சிகிச்சைக்கு முன்னர் பரிதாபமாக பலியானர்.இந்த சம்பவம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

 

Tags : The education officer fainted and died

Share via