எஸ்.எஸ்.எல்.சி- பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: மதுரை மத்திய ஜெயில் கைதிகள் தேர்ச்சி

by Editor / 20-06-2022 01:36:02pm
எஸ்.எஸ்.எல்.சி- பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: மதுரை மத்திய ஜெயில் கைதிகள் தேர்ச்சி

மதுரை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி- பிளஸ் 2 தேர்வுகள் நடந்தன. 

இதில் மதுரை மத்திய சிறையில் இருந்து ஒரு பெண் உள்பட 8 பேர் பிளஸ்-டூ தேர்வு எழுதினார்கள்.

இதில் ஒருவர் தவிர மற்ற அனைவரும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

மதுரை மத்திய ஜெயிலில் இருந்து பிளஸ்- டூ தேர்வு எழுதிய சிறைக்கைதி கார்த்திகேயன் 520 மதிப்பெண்கள் பெற்று உள்ளார். அதேபோல இன்னொரு கைதி லட்சுமிக்கு 495 மதிப்பெண்கள் கிடைத்து உள்ளது.

 

Tags :

Share via