திருச்சியில் வாகன சோதனையின்போது அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்கள் வைத்திருந்ததாக 7 பேர் கைது

by Editor / 21-06-2022 11:35:06am
திருச்சியில் வாகன சோதனையின்போது அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்கள் வைத்திருந்ததாக 7 பேர் கைது

திருச்சி மாவட்டத்தில் வாகன சோதனையின்போது அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்கள் வைத்திருந்ததாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி புதுக்கோட்டை சாலையில் வாகன சோதனையின்போது நிற்காமல் சென்ற காரை போலீசார் மடக்கி பிடித்தனர். காரை சோதனையிட்டபோது வீச்சரிவாள் கத்தி மற்றும் நாட்டு வெடிகுண்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன காரிலிருந்த அவர்களிடம் நடத்திய விசாரணையில் தற்காப்பிற்காக ஆயுதங்கள் வைத்திருந்ததாக தெரிவித்த நிலையில் போலீசார் 7 பேர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

 

Tags :

Share via