மாயமான பள்ளி மாணவன் கிணற்றில் சடலமாக மீட்பு சக மாணவர்கள் கத்தியால் குத்தி கொலை செய்தது விசாரணையில் அம்பலம்

by Editor / 23-06-2022 03:52:05pm
மாயமான பள்ளி மாணவன் கிணற்றில் சடலமாக மீட்பு சக மாணவர்கள் கத்தியால் குத்தி கொலை  செய்தது விசாரணையில் அம்பலம்


மாயமான பள்ளி மாணவன் கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் நண்பர்களை கொலை செய்து கிணற்றில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. உத்தமபாளையத்தில் சேர்ந்த 16 வயதான மாதவன் என்ற மாணவன் கடந்த 18ஆம் தேதி நண்பர்களுடன் விளையாட சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மாணவனை தேடி வந்த போலீசார் பாழடைந்த கிணற்றில் சடலமாக மீட்டனர். சந்தேகத்தின்பேரில் மாணவனின் நண்பர்களான 17 வயது சிறுவர்கள் இருவரையும் அல்லா பிச்சை என்ற இளைஞரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் கஞ்சா வாங்கிக் கொடுக்கச் சொல்லி மாதவனிடம் ஆயிரம் ரூபாய் கொடுத்ததாகவும் மாதவன் கஞ்சா வாங்கி கொடுக்காததால் ஆத்திரத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

 

Tags :

Share via