பாண்டிச்சேரி சாராயம் விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

by Editor / 30-06-2022 01:34:44pm
பாண்டிச்சேரி சாராயம் விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள பந்தநல்லூர் காவல் சரகம் புலிக்கொடி கிராமத்தில் பாண்டிச்சேரி சாராயம் வைத்துக் கொண்டு வியாபாரம் செய்த சரண்ராஜ் என்ற வாலிபரை கடந்த ஜூன் 1-ஆம் தேதி பந்தநல்லூர் ஆய்வாளர் ஓம்பிரகாஷ் கைது செய்தார்.அவரிடம் இருந்த 20 லிட்டர் பாண்டிச்சேரி சாராயத்தை கைப்பற்றினார். அப்போது சரண் ராஜின் தாயார் விஜயா தலைமறைவானார். இந்த வழக்கு தொடர்பாக சரண்ராஜ் நீதிமன்ற காவலில் திருவிடைமருதூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சரண்ராஜ்ஜை ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதின் பேரில் திருவிடைமருதூர் கிளை சிறைச்சாலையில் இருந்து திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு சரண்ராஜ் கொண்டு செல்லப்பட்டார்.

 

Tags :

Share via