மாணவிகளிடம் பாலியல் சீண்டல் சென்னையில் அரசுப்பள்ளி ஆசிரியர் கைது

by Editor / 30-06-2022 01:48:03pm
மாணவிகளிடம் பாலியல் சீண்டல்  சென்னையில் அரசுப்பள்ளி ஆசிரியர் கைது

சென்னை, அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் ராமசாமி(45), இவர் முகப்பேரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றதால் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளின் செல்போம் எண்களை பெற்று வைத்திருந்தனர். ஸ்ரீதரும் தான் வகுப்பு எடுத்த மாணவிகளின் தொடர்பு எண்கள் அனைத்தையும் அவரது செல்போனில் சேமித்து வைத்திருந்தார். பின்னர் மாணவிகளுக்கு தவறான எண்ணத்துடன் வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். மேலும் செல்போனில் அழைத்தும் பேசியுள்ளார்.ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் நேரடி வகுப்புகள் தொடங்கியதும் ஸ்ரீதரின் அத்து மீறல்கள் சீண்டல்கள் அதிகரித்ததாக கூறப்படுகிறது. ஆசிரியரின் அத்துமீறல்களை வெளியே சொன்னால் படிப்பு பாதிக்கப்படுவதோடு எதிர்காலமும் கேள்விக்குறியாகி விடுமோ என்ற அச்சத்தில் மாணவிகள் வெளியே சொல்ல முடியாமல் தவித்து வந்ததாகவும், தற்போது பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வுகள் முடிந்து தேர்வு முடிவும் வெளி வந்த நிலையில் ஆசிரியர் ஸ்ரீதரால் பாதிக்கப்பட்ட மாணவிகள் குழந்தைகள் நல அலுவலரிடம் துணிச்சலுடன் முறையிட்டனர்.அதன்படி திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணைில் ஆசிரியர் ஸ்ரீதர் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போக்சோ பிரிவு உள்பட மேலும் சில பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு ஆசிரியர் ஸ்ரீதரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில் ஆசிரியர் ஸ்ரீதர் மாணவிகளுக்கு அனுப்பிய வாட்ஸ் அப் உரையாடல்கள் மற்றும் ஆடியோ சமூகவலை தளங்களில்  வெளியாகியுள்ளது. பள்ளி முடிந்த பின்பு மாணவிகளை மோட்டார் சைக்கிளில் ஆசிரியர் ஸ்ரீதர் அழைத்து சென்றதும் மாணவிகளின் கைகளை பிடித்து முத்தம் கொடுத்ததாகவும், வாட்ஸ்அப் உரையாடல்கள் வேகமாக பரவி வருகிறது. அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via