ஜெயலலிதா வாழ்ந்த கொடநாடு பங்களாவில் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்துள்ளன
அ.தி.மு.கவிற்குள் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று ஊகிக்க முடியாமல் காட்சிகள் அரங்கேறி வருகின்றன. வரும் 11ந்தேதி பொதுக்குழு நடத்த தடையில்லை என்கிற நிலை வந்ததும் இ.பி.எஸ். பக்கம் உற்சாகம் பீறிட்டு பொதுக்குழு நடக்கும் வேலைகளை மும்முரப்படுத்த ஆரம்பித்தனர் .இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா கொடநாடு விவகாரம் குறித்து பன்னீர் செல்வத்தின் இரண்டாவது மகன் ஜெய பிரதீப் தன் ட்வீட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார் . அதில் ஜெயலலிதா வாழ்ந்த கொடநாடு பங்களாவில் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்துள்ளன . இந்த சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு தமிழக அரசைக்கேட்டுக்கொள்கிறேன் .கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் உண்மை குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து சட்டத்தின் முன்னிறுத்த வேண்டுமென்று அ.தி.மு.க உண்மை தொண்டர்கள் சார்பாக கேட்டுக்கொள்வதாக பதிவிட்டுள்ளார்.
Tags :