காதலித்து வீட்டுக்கு தெரியாமல் திருமணம் மனைவியை கழுத்தை அறுத்த கணவன்

by Editor / 06-07-2022 10:04:26am
காதலித்து வீட்டுக்கு தெரியாமல் திருமணம்  மனைவியை கழுத்தை அறுத்த கணவன்

வேலூர் மாவட்டம் குப்பத்தா  மோட்டூர் பகுதியே சேர்ந்த யாசினி. இவர் சிஎம்சி மருத்துவமனையில் டி.எம்.ஆர் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் சதீஷ்குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார்.இருவரும் ஒருவருக்கொருவர் வீடுகளுக்குத் தெரியாமல் இரத்தனகிரி கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.மறைமுகமாக கணவன்,மனைவியாக அவரவர் வீடுகளில் வாழ்ந்து வந்த இவர்கள் 
இன்று திருவலம் மார்க்கெட் பகுதியில் சந்தித்து பேசியுள்ளனர்.அப்போது இவர்கள் இருவருக்குமிடையே  தகராறு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் தீடீரென ஆவேசமடைந்த சதீஷ்குமார் யாசினியின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார்.இதனைக்கண்ட பொதுமக்கள் அலறியுள்ளனர்.மேலும் இது குறித்து போலீசாருக்கும் தாக்கவள் கொடுத்துள்ளனர்.இதில் படுகாயம் அடைந்த யாஷினியை  சிஎம்சி மருத்துவமனையில் அனுமதித்தனர்.இது தொடர்பாக யாஷினி புகாரின் அடிப்படையில் சதீஷ்குமாரை திருவலம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : A husband who cut the throat of his married wife after falling in love

Share via